படைத்தவை அல்ல படித்தவை

எத்தனை சில்லுகளாக இதயம் சிதறியது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது தோல்வியடைந்த காதலின் ஆழம்

உண்மையும், பொய்யும் அதனதன் இடத்திலிருக்கும்போது எந்த கஷ்டமுமில்லை.. இடம் மாறும் போதுதான் எல்லா தொல்லைகளும்

வெறுப்பை காட்டிலும் அன்பு குறித்துதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் காயப்படுத்திவிடும் என்பதால்

அறிவுதான் பல சமயங்களில் வினோதமான பிரச்சனைகளை கொண்டுவருகிறது

அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என எதையும் தராமல் வெறுமனே கழிகிறது உனைச் சந்திக்காத நாட்கள்

சில சமயங்களில் அன்பிற்கும், பைத்தியகாரத்தனங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது




பி.கு. படைத்தவை அல்ல படித்தவை..!!

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்